Monday, 21 February 2022

கிராமத்தின் சூழல்

 கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவிநாசி ராமநாதபுரம் என்னும் கிராமத்தில் வாழ்ந்து வருகிறேன். எனது வீடு விவசாயம் தென்னை கரும்பு,வாழை, நெல் பயிர்கள் மற்றும் கால்நடைகள்  ஆடுகள், மாடுகள், கோழிகள், மயில்கள்,மான்கள் சூழ்ந்த பகுதியில் அமைந்துள்ளது. அருகில் கருவலூர் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் என்னும் பிரசித்தி பெற்ற ஸ்தலம் உள்ளது. இப்பகுதியில் நல்லாறு என்னும் ஒரு ஆறு தோற்றம் கொள்கிறது. இன்றளவிலும் இப்பகுதி பருவகால மழை போதிய அளவு பெறுகிறது. 

Saturday, 29 August 2020


Velusamy Subbaiyan
<p>நான் எனது அறுபது வயதை கடந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் அந்த பிறப்பு பற்றிய விவரங்கள் அடங்கிய ஓலைச் சுவடியில் அறுபது வருடங்கள் உள்ளடக்கிய தமிழ் வருடங் களில் சாா்வாி ஆண்டு ஐப்பசி மாதம் ஏழாம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை ஏழு மணிக்கு பிறந்ததாக எழுதியிருக் கிறாா்கள். இந்த அறுபதாவது வயது என்பது பௌா்ணமி திதி அன்று சந்திரன் முழுமையும் பிரகாசமாக வானத்தில் தவழ்ந்து வருவதைப் போன்றது. மீண்டும் அடுத்த சுற்று இந்த சாா்வாி ஆண்டு ஐப்பசி மாதம் ஏழாம் நாள் துவங்குகிறது. வரும் ஒவ்வொரு ஆண்டும் தேய்பிறை சந்திரனைப் போன்று எனது உயிரை தக்க வைப்பதில் உடல் விாிசல் உண்டாக்கிக் கொள்ளும். ஆனாலும் வரும் அறுபது தமிழ் வருடங்களில் அதிகபட்ச ஆண்டுகள் கடந்து செல்லும் வகையில் நான் எனது உடலை முறையாக பராமாித்து உயிரை உடல் தக்க வைத்துக்கொள்ள முயற்சி செய்து கொண்டி ருக்கிறேன். நான் செயல் துடிப்புடன் இருக்கும் வரை இந்த மண்ணில் யாதொரு தீஞ்செயலும் செய்ய துணை நிற்க மறுத்து ஆக்கம் என்ற நன்மை தரும் செயலில் துணிச்சலுடன் நடைபயில உறுதி கொள்கிறேன்

Sunday, 7 June 2020

இதய ரத்தக் குழாய் அடைப்பு சிகிச்சை

20-12-2019 இரவு 9 மணி மாா்பு பகுதியில் வலி ஏற்பட்டு மூச்சு தினறலால் அவதிப் பட்டேன். அதிகாலை 4 மணி வரை தொடா்ந்து இருந்தது. தலை சுற்றல் மற்றும் நிதான குறைவு காணப் பட்டது.  மூன்று நாட்கள் தொடா்ந்தது. இராமகிருஷ்ணா மருத்துவ மனை கோவை மருத்துவாிடம் நோில் ஆலோசை கேட்டேன். இதயம் ரத்தக் குழாய் நல்ல நிலையில் உள்ளதாக தொிவித்தாா். வயிற்றில் அல்சா் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ள தாகவும்  Pantoprazole 40 mg மாத்திரை பத்து நாட்கள் சாப்பிட்டு வரவும் உணவு முறையில் சில கட்டுப்பாடு களுக்கும் அறிவுறுத்தினாா்.  அதன்படி செய்து வருகிறேன்.  இன்று வரை பிரச் சனை தொந்தரவுகள் ஏதுமில்லை.

Sunday, 14 April 2019

இதய ரத்தக் குழாய் அடைப்பு சிகிச்சை

நடு மாா்பு மற்றும் வயிற்று மேல் பகுதிில் வலி உணரப்பட்டதால் 09-04-2019 இராமகிருஷ்ணா மருத்துவ மனை கோவையில் மருத்துவா் ஆலோசனைப்படி ECHO,TMT டெஸ்ட் செய்யப்பட்டது. டெஸ்ட் ரிப்போா்ட் இகயம் நல்ல நிலையில் இருந்து இயஙஂ குவதை காட்டுவதாக மருத்துவா் தொிவித்தாா். மருந்து மாத்திரை தொடா்ந்து எடுத்துக்கொள்ளவும் அறி வுறுத்தினாா். மத்திய அரசின் மலிவு விலை மருந்துகளையே எடுத்துக் கொள்கிறேனஂ. காலை நேரம்: ASPIRIN TABLETS I.P.150 mg., Clopidogrel Tablets I.P. 75 mg. இரவு: TELMISARTAN Tablets I.P.20 mg., Atorvastatin Tablets I.P. 40 mg.

Saturday, 6 April 2019

இதய இரத்தக் குழாய் அடைப்பு

2014 ஆம் ஆண்டில் எனது வயது 54. எனது உடலில் ஒரு மாற்றம் தெரிந்தது. நவம்பா் மாதம் திருப்பூாில் இலவச இதய நோய் மருத்துவ முகாம் லயன்ஸ் ரோட்டாி கிளப் நடத்தியது.  அதில் சென்னை அப்பல்லோ மருத்துவ மனை மருத்துவா்கள் பரிசோதனைகள் செய்து இரத்த அழுத்தம் 150/90 mmHg இருப்பதை தொிவித்தாா்கள்.  எனக்கு தலை சுத்தல், நடக்கும் பொழுது கீழே விழுவது போன்ற பயம் இருந்தது.  அடுத்த ஒரு வாரத்தில் அவினாசியில் உள்ள மூன்று மருத்துவ மனைகளில் பாிசோதனைகள் செய்த போது இரத்த அழுத்தம், சா்க்கரை,கொலஸ்டிரால் அளவுக்கு அதிகமாக இருப்பதும் தொிய வந்தது.  டிசமபா் 2014 முதல் அவினாசி AKVN மருத்துவ மனையில் மருத்தவாின் பரிந்துரைப்படி மருந்து கள் எடுத்துக் கொண்டு உணவுக் கட்டுப்பாடு,உடற் பயிற்சிகளும் செய்து வந்தேன்.  ஆறு மாதஙஂகளில் அனைத்தும் சரியான அளவிற்கு வந்துவிட்டது. மருத்துவாின் அறிவுரைப்படி மருந்துகள் அனைத்தும் சாப்பிடுவதை நிறுத்திக் கொண்டேன். 2018 மாா்ச் வரை AKVN மருத்துவ மனையிலேயே மூன்று மாத்களுக்கு ஒரு முறை சா்க்கரை, கொலஸ்டிரால், இரத்த அழுத்தம் டெஸ்ட் செய்து கட்டுப்பாட்டில் வைத்திருந்தேன். 2018 ஏப்ரல் முதல் உணவு கட்டுப்பாடு, உடற் பயிற்சிகள் ஏதும் இல்லை. ஜுன் மாதம் ஆரம்பத்தில் அரை கிலோ மீட்டா் தூரம் நடந்தால் நடு மாா்புக்கு கீழ் இறைப்பைக்குச் சற்று மேல் வலி வந்தது. ஜூலை மாதம் வழக்கமான டெஸ்ட் செய்ய AKVN மருத்துவ மனை சென்றேன்.  மருத்துவரிடம் தெரிவித் தேன்.  டெஸ்ட் ரிப்போா்ட் பாா்த்தாா். அனைத்தும் சாியான அளவில் உள்ளது. வயிற்றுப் புண் காரணமாக அந்த வழி வரலாம் என அதறஂகு மருந்துகள் சிபாாிசு செய்தாா். அப்பொழுதே ஒரு ECG எடுத்துப் பாா்க்கப் பட்டது. ECHO, TMT, X-RAY என ஒரு மாஸ்டா் இதய பாி சோதனை செய்து பாா்த்தாா். இதயம் நல்ல நிலையில் இயங்குகிறது. வயிற் றுப்புண் காரணமாகவே அந்த வலி வருவதாக நம்பப்பட்டு அதற்கான மரு ந்துகள் சாப்பிட்டு வர டாக்டா் தொிவித் தாா்.  ஆகஸ்டு மாதம் வலி அதிகம் ஆனது. கோவை, சிங்காநல்லூா் சாந்தி கியா்ஸ் மருத்துவ மனையில் என்டோஸ்கோபி மூலம் வயிற்றின் உள் பகுதி  பாா்க்கப்பட்டது. வயிற்றுப் புண் உறுதி செய்து மருந்துகள் எடுத்துக் கொண்டேன்.  26-09-2018 இரவு 10.00 மணிக்கு மார்புக்கு கீழ் தாங்க முடி யாத அளவில் வலி ஏற்பட்டது.  கோவை கொங்குநாடு மருத்துவ மனையில் ஆஞ்ஜியோகிராம் செய்து பாா்க்கப் பட்டது.  இதய இரத்தக் குழாயில் அடைப்பு இருந்தது.  08-10-2018 ல் கோவை இராமகிருஷ்ணா மருத்துவ மனையில் டாக்டா் பாலாஜி அவா்கள் ஆஞ்ஜியோபிளாஸ்ட் சிஸ்டம் முறை யில் இரத்தக்குழாய் அடைப்பு நீக்கி ஸ்டென்ட் வைத்து சாி செய்து இதயம் சீராக இயங்கச் செய்துள்ளாா்.  11-10-2018 ல் மருத்துவ மனையிலிருந்து வீடு திரும்பினேன். மத்திய அரசின் மலிவு விலை மருந்துகள் தொடா்ந்து சாப்பிட் டுக் கொண்டிருக்கிறேன்.  எனது 58 வயதில் இந்த உலக வாழ்வில் உடலும் உயிரும் வளம் பெற இறைவனைப் பிராத்திக்கிறேன்.

Monday, 4 August 2014

                   உலக வாழ்வில் - உடலும் உயிரும்

                                             மானிடரின் மனம்

                 உலக வாழ்வு என்பது உடல், உயிர், மனம் இம்மூன்றின் ஒருங் கிணைப்புடன் செயல்படும் ஒரு உன்னதமான இயக்கமாகும்.   மனிதன் உண்ணும் உணவின் ஒரு பகுதி சக்தியாக உருவெடுத்து உடலைச் சுற்றி காந்தப் புலமாக மாறிவிடுகிறது.  இதை மனம் என்கிறோம்.   இந்த மனம் ஐம்புலன்கள் வாயிலாகவோ அல்லது மூளையின் பதிவுகளிருந்தோ ஏதாவது ஒன்றை ஈர்த்துக் கொண்டு செயல்பட்டுக்கொண்டிருக்கும்.  மூளையினால் அடை யாளம் காணப்பட்ட ஒரு மனிதரைப் பார்த்தால் அவரிடம் பேசலாமா, வேண்டாமா என்று முடிவெடுத்துவிடும்.  உடல் உழைக்கும் போது காந்தப் புலம் அழுத்தம் குறைந்து மனம் அடங்கிவிடும்.  ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உடல் சோர்ந்து மனம் தூக்க நிலைக்குச் சென்று விடும்.  தூக்க நிலையில் மனம் செயல்படாது.  ஆனால் மூளை செயல்பட்டுக் கொண்டிருக்கும்.  உடல் உறுப்புகளில் அளவுக்கு மீறிய அழுத்தம் கொடுக்கும்போதோ அல்லது மூளையில் அளவுக்கு அதிகமாக ஆழமாக பதியப்பட்டுள்ள பயம், ஆசை, துக்கம் ஆகியவை மனதை தூக்க      நிலையில் இருந்து செயல் நிலைக்குக் கொண்டு வந்து விடும்.  சுற்றுப்புறச் சூழல்  தன்மைக்கு ஏற்ப மனம் செயல்படும்.  ஒரு மாணவனின் மனம் பள்ளி அறையில் எதிரில் உள்ள ஆசிரியரின் தன்மைக்கு ஏற்ப செயல்படும். மனம் என்னும் காந்தப் புலத்தின் உணர்வுக்கு ஏற்ப மூளை தன் உடல் உறுப்புகளை  ஒழுங்கு படுத்திக் கொள்ளும்.

ஒரு மனிதனுக்கு பிரம்ம நிலை ஏற்படும் பொழுதோ அல்லது அறுவைச் சிகிச்சை செய்யும் போதோ அவனது மனம் காந்தப் புலத்தை முற்றிலும் இழக்கச் செய்யப்படுகிறது.  அதாவது மின்சாரம் தடை செய்யப்பட்டவுடன் மின் கம்பியை அறுத்து எடுப்பதைப் போல ஆகும்.

மனதை அடக்கி நல்வழிப்படுத்த வேண்டும்.  மனதை அடக்க மனம் மூளையை ஈர்க்க வேண்டும்.மூளை தன் பதிவுகளில் உள்ள நல்லது கெட்டது என்ற இரண்டு வகையில் ஏதோ ஒன்றை ஆராய்ந்து நன்மை கொடுக்கும் செயல்களுக்கான எண்ணத்தைத் தீவிரப்படுத்த முயற்சிக்கும்.  இதைச் செய்தால் எதிர்காலம் எப்படி இருக்கும், எதிர்காலம் இப்படி இருக்க வேண்டும் என்றால் எதை எப்படிச் செய்ய வேண்டும்.இந்த விஷயங்களை மூளையில் மரபு வழியில் பதியப்பட்டுள்ளபதிவுகள், தற்கால பதிவுகளில் பதியப்பட்டுள்ள பதிவுகள் ஆகியவற்றை வைத்து மனதை செயல்படத் தீர்மானிக்கும்.

ஒரு செய்யுள் மனப்பாடம் செய்யும் போது மனம் அதை மட்டும் முழுமையாக ஈர்த்துச் செயல்பட்டால்  விரைவில் மனப்பாடம் ஆகும்.  அது மூளையிலும் பதிந்துவிடும்.  மனப்பாடம் செய்தஒரு செய்யுள் ஒப்பிக்கும் போது சரளமாக வெளிப்படும்.  இடையில் ஒரு சொல் மறதி ஏற்பட்டால் மனம் மூளையை ஈர்த்து அந்தச் சொல்லை மனத்திற்குள் கொண்டுவந்து விடும். இரண்டு அல்லது மூன்று முறை இவ்வாறு திரும்ப திரும்ப செய்யும்போது மனதில் முழுமையாக அந்தச் செய்யுள் இடம் பிடித்துவிடும்.  பின் தடங்கல் இன்றி செய்யுள் ஒப்புவிக்கப்பட முடிகிறது.  மூளையை பிசைய வேண்டிய அவசியம் இருக்காது.

மனம், எண்ணம், துணிவு பற்றி தெய்வப்புலவர் திருவள்ளுவர் திருக்குறளில் வெளிப்படுத்தி யுள்ளதையும் மனதில் கொள்வோம்.

1. வினைத் திட்பம் என்பது ஒருவன்  மனத்திட்பம்
    மற்றைய எல்லாம் பிற.

2. எண்ணிய எண்ணியாங்கு  எய்துப எண்ணியார்
    திண்ணியார் ஆகப் பெறின்.

3. எண்ணியார் எண்ணம் இழப்பர் இடன் அறிந்து
     துன்னியார் துன்னிச் செயின்.

4. எண்ணித்துணிக கருமம்;  துணிந்தபின்
     எண்ணுவம் என்பது இழுக்கு.

5.  சூழ்ச்சி முடிவு துணிவு எய்தல் அத்துணிவு
      தாழ்ச்சியுள் தங்குதல் தீது.

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு; மனம் விட்டு பேச வேண்டும்; மனம் போன போக்கில் போக வேண்டாம்; மனதை வளப்படுத்துங்கள்; எண்ணத்தை மேம்படுத்துங்கள்; மனதில் உறுதி வேண்டும்; மனதில் துணிவு வேண்டும்; நல்லதை நினைக்க வேண்டும்;  நல்லதையே செய்ய வேண்டும்  என்பனவற்றை சிந்தனையாளர்கள் நமக்கு நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

நமது மனதை இறைவனின் திருவடிகளில் செலுத்தி  இறையருளை ஈர்க்கச் செய்வோமாக.  அந்த நல்லருள் நம்மை நல்வழிப் பாதையில் இட்டுச் செல்லும் என்றும்.

                                                 உலக வாழ்வில் உடலும் உயிரும்.
                                                                              ***